Published : 24 Jun 2019 11:28 AM
Last Updated : 24 Jun 2019 11:28 AM
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7. 5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளமான பாலியிலும் உணரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வுகள் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்திலும் உணரப்பட்டதாகவும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைக்கு வந்ததாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT