Published : 15 Mar 2018 07:40 AM
Last Updated : 15 Mar 2018 07:40 AM
பாகிஸ்தானில் செனட் சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இந்து பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி (39), நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நகர்பார்கர் மாவட்டத்தில் 1979-ம் ஆண்டு ஏழை இந்து தலித் குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ண குமாரி கோல்ஹி. வறுமை காரணமாக, 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் 16-ம் வயதில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவரின் உதவியுடன் மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சோஷியலாஜி படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றார். தலித் முன்னேற்றத்துக்காகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
இதனிடையே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கிருஷ்ண குமாரி இணைந்தார். பின்னர், பெனாரா நகர யூனியன் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற செனட் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இந்து தலித் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற செனட் உறுப்பினராக கிருஷ்ண குமாரி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், அவர் தனது மாகாணத்துக்குரிய பாரம்பரிய உடையில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT