Published : 01 Mar 2018 04:16 PM
Last Updated : 01 Mar 2018 04:16 PM

நான் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன்- மீட்க வந்த ஒயிட் ஹெல்மேட்ஸ் வீரரிடம் கூறிய சிரிய சிறுமி

சிரியாவில் வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணியை கடந்து ஐந்து ஆண்டுகளாக செய்து வருகின்றனர் ஒயிட் ஹெல்மேட்ஸ் தன்னார்வ அமைப்பினர்.

சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் புழுதி பறக்கும் தூசுகளுக்கு இடையே அகப்பட்டு கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு. ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவற்றில் பெண் தன்னார்வலர்களும் அடக்கம்.

தாங்கள் போர்க்களத்தில் சந்திக்கும் உணர்வுப்பூர்வ தருணங்களை The White Helmets என்ற ட்விட்டர் என்ற பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒயிட் ஹெல்மேட் தன்னார்வலரான மக்மூத் ஆதாம் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான பதிவையிட்டிருக்கிறார். அதில் கட்டிடங்களிலிருந்து சிறுமி ஒருவரை மீட்ட அனுபவத்தை மக்மூத் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில் "சிரியாவின் கவுட்டா நகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என் கைக்கு சிறுமி ஒருவர் தென்பட்டார். அவரைச் சுற்றியிருந்த கற்களையும் அகற்றி அவளை தூக்கும்போது நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் என்றாள் அந்தச் சிறுமி'' என்று உணர்வுமிக்க தருணங்களை பகிர்ந்திருந்தார்.

இத்துடன் சிரியாவின் கவுட்டா நகரில் கடந்த ஒருவாரமாக நடந்த மீட்புப் பணிகளில் பலியான மக்மூத் அல்கிலானி என்ற வீரருக்கு ஒயிட் ஹெல்மேட்ஸ் தன்னார்வ அமைப்பு  இரங்கல் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x