Published : 28 Mar 2018 08:40 AM
Last Updated : 28 Mar 2018 08:40 AM
ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் (66). பிரிட்டனில் வசித்து வந்த ஸ்கிரிபால் மீது மர்ம நபர் ஒருவர் ரசாயனத்தை வீசினார். இதில் நிலைகுலைந்த அவர் சிகிச்சை பெறுகிறார். இந்த விவகாரத்தில் ரஷ்யாமீது குற்றம் சாட்டிய பிரிட்டன், 23 ரஷ்ய தூதரக அதிகாரி களையும் அமெரிக்கா 60 பேரை யும் ஐரோப்பிய யூனியன் 40 பேரையும் வெளியேற்றியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவர் ரகசிய மாக உளவு பார்ப்பது தெரியவந்துள்ளது. எனவே, வியண்ணா உடன்படிக்கையின்படி, அவர்களை ஒரு வாரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT