Published : 02 Mar 2018 08:54 AM
Last Updated : 02 Mar 2018 08:54 AM

உலக மசாலா: துப்பாக்கிகளுடன் நடந்த பிரார்த்தனை

மெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், துப்பாக்கிகளைக் கையில் ஏந்தி, குண்டுகளைக் கிரீடமாக அணிந்துகொண்டு பிரார்த்தனை நடைபெற்றிருக்கிறது! ஃப்ளோரிடாவில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து பலர் உயிர் இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அமெரிக்கர்கள் மீளவில்லை. அதற்குள் தேவாலயத்தில் அதே வகை AR–15 ரைஃபிள்களை எல்லோரும் கையில் பிடித்தபடி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ‘அமைதி மற்றும் ஒற்றுமை சரணாலய தேவாலயம்’ என்ற பெயரை வைத்துக்கொண்டு, பாதிரியார் சியான் மூன், துப்பாக்கி இன்றி யாரும் இந்தப் பிரார்த்தனைக்கு வரக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்! திருமண ஆடைகளை அணிந்துகொண்டு, தலையில் கிரீடமும் கையில் துப்பாக்கியையும் பிடித்துக்கொண்டு இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏராளமான ஜோடிகள் கலந்துகொண்டனர். இதைக் கேள்விப்பட்டவுடன் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் தேவாலய வாயிலில் கூடி, எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினார்கள். “சாத்தானை விரட்டியடிக்கவே இந்தத் துப்பாக்கிப் பிரார்த்தனை. ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கினோம். இதைக் கொடுத்து, கடையில் இருந்து துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டனர். பார்ப்பதற்கு பயங்கரமான துப்பாக்கிகளாகத் தெரிந்தாலும், இவை அனைத்தும் குண்டு போடாத துப்பாக்கிகள். அதைப் பரிசோதித்த பிறகே தேவாலயத்துக்குள் அனுமதித்தோம். அதனால் ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறது தேவாலயம் தரப்பு. “இவ்வளவு பேர் ஓரிடத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் இருப்பதைப் பார்க்கும்போது, அது சிலருக்கு ஆர்வத்தைத் தூண்டலாம் என்பது கூடவா இவர்கள் யாரும் உணரவில்லை? அன்பே உருவான இறைவனை வழிபடும் தேவாலயத்துக்குள் எதற்கு இந்தத் துப்பாக்கி?” என்று கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

தேவாலயம் இப்படிச் செய்யலாமா?

ந்தோனேசியாவைச் சேர்ந்த அக்மல் என்ற 14 வயது சிறுவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டைப் போடுவதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தை யாரும் நம்பவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றார் அக்மல். அங்கே மருத்துவர்களின் முன்னிலையில் இரண்டு முட்டைகளை வாய் வழியே துப்பினார். மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். ஒரு முட்டை இருப்பது தெரிந்தது. “மனித உடலுக்குள் இருந்து முட்டை வருவது சாத்தியமே இல்லை. மலக்குடலிலிருந்து எப்படி முட்டை வரும்? முழுமையாக முட்டையை முழுங்கினால் தவிர வேறு வழியில்லை. முழு முட்டையும் மலக்குடல்வரை எப்படி உடையாமல் இருக்கும் என்பதும் புரியவில்லை” என்கிறார் மருத்துவர். “அவன் ஒருநாளும் முட்டைகளை விழுங்கியதில்லை. ஒரு தடவை இட்ட முட்டையை உடைத்துப் பார்த்தபோது முழுவதும் மஞ்சள் கருவாக இருந்தது. இன்னொரு முறை முட்டையை உடைத்துப் பார்த்தபோது முழுவதும் வெள்ளைக் கருவாக இருந்தது” என்கிறார் அக்மலின் தந்தை. அக்மலின் முட்டைகளை ஆய்வு செய்ததில், அது கோழி முட்டை என்று தெரியவந்துள்ளது.

மனிதனுக்குள் எப்பட கோழி முட்டை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x