Published : 14 Mar 2018 09:42 AM
Last Updated : 14 Mar 2018 09:42 AM

தாகூர் புத்தகம் ரூ.46 ஆயிரத்துக்கு ஏலம்

நோபல் பரிசுபெற்ற இந்தியா வின் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம் பாஸ்டன் நகரில் சுமார் ரூ.46 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான பாஸ்டன் நகரில் மேக்மில்லன் நிறுவனம் வெளியிட்ட தி கிங் ஆப் தி டார்க் சேம்பர் என்ற ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் அண்மையில் ஏலம் விடப்பட்டது. இது தாகூர் எழுதிய ராஜா என்ற பெங்காலி நாடகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் தாகூர் தனது பவுண்டைன் பேனாவால் கையெழுத்திட்டுள்ளார்.

1916-ல் இந்தப் புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்டனைச் சேர்ந்த ஆர்ஆர் நிறுவனம் இந்த புத்தகத்தை ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஏலத்தில் இது சுமார் 500 டாலர் அளவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலத்தில் இது 700 அமெரிக்க டாலர்களுக்கு எடுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரமாகும். ஏலம் எடுத்தவர் பெயர் தெரிவிக்கப்படவில்லை.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x