Published : 11 May 2019 09:35 PM
Last Updated : 11 May 2019 09:35 PM

பாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாகிஸ்தானின்  குவாதர் நகரில் இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. இந்த துறைமுகப்பகுதிக்கு மிக அருகில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது.

இந்த ஓட்டலில் இன்று மாலை தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சரமாயாக சுட்டனர்.

நட்சத்திர ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஓட்டல்களில்தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்ததாக பாகிஸ்தானின் முன்னணி பத்திரிக்கையான ‘டான்’ தெரிவிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ‘‘ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. இதனிடைய பலுசிஸ்தான் விடுதலைப்படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x