Published : 10 Sep 2014 11:29 AM
Last Updated : 10 Sep 2014 11:29 AM
இத்தாலியில் ஹோட்டலில் சாப்பிடச் சென்றவருக்கு கடல் உணவில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 5 முத்துகள் கிடைத்தன. இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் டி பியான்கோ. இவர் தனது காதலிக்கு ஹோட்டலில் விருந்தளிக்க திடீரென திட்டமிட்டார்.
இதையடுத்து சாலிர்னோ நகரில் உள்ள ஹோட்டலை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டிய சிறப்பு உணவுகளையும், இருக்கைகளையும் முன்பதிவு செய்தார். எனினும் டி பியான்கோ கேட்ட உணவு வகைகள் ஹோட்டலில் இல்லை. எனினும் காதலியை கண்டிப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால், அங்கு இருப்பவற்றில் சிறப்பான உணவை வழங்குமாறு கூறினார்.
இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள், அவர்களுக்கு கடல் உணவை சமைத்து வழங்க முடிவு செய்தனர். இதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்று சிப்பியை வாங்கி வந்து சமைத்தனர்.
காதலியுடன் ஹோட்டலுக்கு வந்த டி பியான்கோவுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. உணவை சாப்பிட தொடங்கிய உடன், அவரது வாயில் ஏதோ தட்டுப்பட்டது, ஹோட்டல் ஊழியர்களை மனதுக்குள் திட்டிக் கொண்டே அதனை எடுத்து பார்த்தவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. எனெனில் அவரது வாயில் சிக்கியது முத்து. இதையடுத்து தங்களுக்கு பரிமாறப்பட்ட உணவை டி பியான்கோ முழுமையாக சோதித்துப் பார்த்தார். அதில் மொத்தம் 5 முத்துகள் இருந்தன. இதையடுத்து ஹோட்டலுக்கு பில்லை செலுத்திவிட்டு, முத்துகளுடன் வீடு திரும்பினார் டி பியான்கோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT