Published : 13 Apr 2019 05:29 PM
Last Updated : 13 Apr 2019 05:29 PM
காருக்குள் சிலந்தியைப் பார்த்து பயத்த இளம்பெண், சுவரில் மோதி காயமடைந்தார். இதில் காரும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் நியூயார்க்கின் கெய்ரோ பகுதியில் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.
கெய்ரோவின் சில்வர் ஸ்பர் சாலையில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காருக்குள் சிலந்தி இருப்பதைக் கண்டார். பயத்தால் அலறிய அவர், ஸ்டியரிங்கை ஒடித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த கற்களாலான சுவர் ஒன்றின் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டது.
இந்தத் தகவலை நியூயார்க் கெய்ரோ காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியைப் படித்த நெட்டிசன்கள், பெண்களுக்கு எட்டுக்கால் பூச்சி மீது எவ்வளவு பயம்? என்ற ரீதியில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT