Published : 04 Apr 2019 06:20 PM
Last Updated : 04 Apr 2019 06:20 PM

ராணுவ உறவுகளை வலுப்படுத்தியவர்- மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சயீத் விருது

இருதரப்புக்கும் இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் மோடி என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய 'சயீத்' விருது அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் இந்த விருதை மோடிக்கு சமர்ப்பித்தார்.

 

இதுகுறித்து அபுதாபி இளவரசர் மொகமது பின் சயீத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள அவர், ''இந்தியாவுடன் நமக்கு வரலாற்று  மற்றும் ராணுவ உறவுகள் உள்ளன. அந்த உறவை மேலும் வலுப்படுத்தியவர் நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி.

 

அவரின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் மோடிக்கு சயீது விருதை வழங்குகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x