Last Updated : 30 Apr, 2019 09:43 AM

 

Published : 30 Apr 2019 09:43 AM
Last Updated : 30 Apr 2019 09:43 AM

5 ஆண்டுகளுக்குப்பின் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் வீடியோ வெளியீடு

5 ஆண்டுகளுக்குப்பின், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் பேசும் 18 நிமிட வீடியோவை அந்த தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.

தங்களின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு இருந்ததது.

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் உள்ள மொசூல் நகரில் உள்ள அல்நூரி மசூதியில் கடைசியாக அல்பாக்தாதி பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதன்பின் அல்பாக்தாதி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேசமயம், அவர் பேசியதாக அவ்வப்போது ஆடியோக்களை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டது. கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆடியோவை வெயிட்டிருந்தது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப்பின் ஐஎஸ் தலைவர் அல்பாக்தாதி பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது. நரைத்த தாடியுடன், அமர்ந்த நிலையில், எந்திரத்துப்பாக்கியை அருகில் வைத்தவாறு அல்பாக்தாதி அந்த வீடியோவில் பேசுகிறார். மிகவும் மெதுவாகவும், இடைவெளி விட்டும் அவர் வீடியோவில் பேசுகிறார். அந்த வீடியோவில் பாக்தாதியுடன் மேலும் 3 பேர் உள்ளனர். அவர்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. 

எனினும், இந்த விடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அந்த வீடியோவில், " உண்மையில், இஸ்லாத்தும், அதன் மக்களுக்கும்  தொடங்கியுள்ள போர் நீண்ட நாட்களுக்கு தொடரும். சிரியாவில் உள்ள பாகஸ் நகரில் போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிலரின் செயல்கள்  மூர்க்ககுணம், காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவிட்டது. அதற்கு பதிலடியாக நாம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தாக்குதல் தொடுத்தோம். பர்கின பாஸோ, மாலி, சூடான், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி, ஜிகாதி தான் உண்மையான தீர்வு என்று புரியவைக்கப்பட்டு போர் நடத்தப்படும். அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடரும்.

அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தோற்விட்டநிலையில், நமது சகோதரர்கள் இலங்கையி்ல கலீபா அரசை அரை உருவாக்க முயற்சித்துள்ளதற்கு பாராட்டுக்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அல் பாக்தாதி?

ஈராக்கில் உள்ள சமாரா நகரில் கடந்த 1971-ம் ஆண்டு அல்பாக்தாதி பிறந்தார். சிறுவயதில் இருந்த இஸ்லாம் மீது தீவிர பற்றாளராக அல்பாக்தாதி இருந்துவந்தார். பள்ளிப்படிப்பை முடித்து, ஈராக்கில் உள்ள சதாம் பல்கலையில் இஸ்லாமிய கல்வியில் அல்-குர்ஆன் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர் அல்பாக்தாதி. அதன்பின் தன்னை அதிதீவிர இஸ்லாமியவாதிகளுடன் இணைத்துக்கொண்டார். 2000-ம் ஆண்டு சலாபிஸ்ட் ஜிகாதித்துவத்தால் ஈர்க்கப்பட்டு, ஈராக்கில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் பாக்தாதி சேர்ந்தார். அதில் பயிற்சி எடுத்தபின், புதிதாக ஐஎஸ் அமைப்பை பாக்தாதி தோற்றுவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x