Published : 19 Apr 2019 05:01 PM
Last Updated : 19 Apr 2019 05:01 PM
வங்கதேசத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு எதிராக வழக்கு கொடுத்த பெண்ணை தீயிட்டு எரித்துக் கொலைச் செய்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து , ”வங்கதேசத்தில் 19 வயதான நஸ்ரத் ஐகான் ரஃபி என்ற பெண் தனது ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொடுத்திருக்கிறார். இதில் அப்பெண்ணுக்கு வழக்கை திரும்ப பெறுமாறு அந்த ஆசிரியர் தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கடிகொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நஸ்ரத் புகாரை வாபஸ் பெறாமல் இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அந்த ஆசிரியர் நஸ்ரத் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால், அவரை கொலை செய்யும்படி ஆட்களை அனுப்பியுள்ளார். அதன்படி ஏப்ரல் 10 தேதி நஸ்ரத் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தததால் மண்எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் 80% தீ காயம் அடைந்த நஸ்ரத் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் 17 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று செய்து வெளியிடப்பட்டுள்ளது.
நஸ்ரத்தை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி வங்கதேசம் முழுவதும் தொடர் போராட்டங்களை பெண்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா உறுதி அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT