Published : 14 Apr 2019 01:05 PM
Last Updated : 14 Apr 2019 01:05 PM
நேபாளத்தில் எவரெஸ்ட் மலையின் அருகே நடந்த விமான விபத்தில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நேபாளத்தில் எவரெஸ்ட் மலையின் அருகில் சிறிய விமானம் ஒன்று லுக்லாவிலிருந்து காத்மண்டுக்குப் புறப்படும்போது ஹெலிகாப்டர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பேர் பலியாகியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியானது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள லுக்லாவில் உள்ள டென்சிங் ஹில்லாரி விமான நிலையம் குறுகிய ஓடுபாதையைக் கொண்டது.இதன் காரணமாக இந்தப் பகுதி உலகின் ஆபத்தான பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT