Published : 27 Mar 2019 12:14 PM
Last Updated : 27 Mar 2019 12:14 PM
உலக நலக்குறைவை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஆறு வாரம் காலம் ஜாமீன் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் தரப்பில், ” நவாஷ் ஷெரீப்பின் உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு அவருக்கு ஆறுவார காலம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவாஸ் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.
உருக்கு ஆலை வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த ஜனவரி மாதம் இதயக் கோளாறு காரணமாக லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூரில் சிறைக்கு மாற்றப்பட்டார்.
3 முறை பிரதமராக இருந்த ஷெரீப், ஒருமுறை கூட தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT