Published : 27 Mar 2019 05:33 PM
Last Updated : 27 Mar 2019 05:33 PM

கரியமில வாயு வெளியேற்றம்: 2017-ஐ விட 2018-ல் இந்தியா 5% அதிகம்

2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன்ஸ் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது என்று சர்வதேச ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஆற்றல் அமைப்பு தரப்பில், “  2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன்ஸ் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும்.

அதுமட்டுமில்லாது 2018 ஆம் ஆண்டு  இந்தியா வெளியிட்ட  கார்பன் டை ஆக்சைடு அளவு , சர்வதேச அளவில் கார்பன் டை ஆக்சைடு  வெளியிடுவதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள  அமெரிக்கா, சீனாவின் வெளியேற்ற அளவை விட அதிகம்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் உலகளவில் ஆற்றல் நுகர்வு தன்மை அதிகரித்துள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு இருந்த சராசரி அளவைவிட இருமடங்கு அதிகம்.

 தொடர்ந்து உலகளவில் அதிகப்படியான வெப்ப தன்மையும், குளிர்ச்சி தன்மையும் தேவைப்படுவதால் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

2018 -ல் இல் உலகளாவிய ஆற்றல் நுகர்வு தேவை 2010 ஆம் ஆண்டு  இருந்த  சராசரி அளவைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சார ஆற்றல் இரண்டு மடக்கும் உற்பத்தி செய்தாலும் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ”என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x