Published : 04 Feb 2019 02:12 PM
Last Updated : 04 Feb 2019 02:12 PM

ஏமன் குழந்தைகளுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்: போப் பிரான்சிஸ்

ஏமன் உள் நாட்டுப் போரில் சிக்கியுள்ள  குழந்தைகளுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபுதாபியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறும்போது, “ஏமனில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அழுகை அந்த இறைவனை சென்றடையும். அவர்களுக்காக நாம் கடுமையாக பிரார்த்தனை செய்வோம். ஏனென்றால் அவர்கள் பசியில் இருக்கிறார்கள். அவர்கள் தாகமாக இருக்கிறார்கள். அவர்களிடம் மருந்துக்கள் இல்லை. அவர்களது உயிர் ஆபத்தில் இருக்கிறது “ என்றார்.

ஏமன் போர்

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x