Published : 15 Jan 2019 01:30 PM
Last Updated : 15 Jan 2019 01:30 PM

துபாயில் பொங்கல் கொண்டாட்டம் 

வளைகுடா பகுதியில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் இந்தியர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களில் சிறந்து விளங்குகிறது. சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமீரகத்தில் வசித்து வருகின்றனர். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று செய்வாய்க்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வாழ்ந்தாலும்  அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாரம்பரிய பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தவறுவது இல்லை.

தமிழ் அமைப்பு சார்பில், துபாயில் உள்ள பெரிய பூங்காக்களில் ஒன்றான முஷ்ரிப் பூங்காவில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கலந்து கொண்டனர்.

தமிழக முறைப்படி அடுப்புமூட்டி, மண் பானையில் பொங்கல் வைத்து, பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர்.

பிறகு பொங்கல் உணவு பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கலாட்டா குடும்பம் அமைப்பைச் சேர்ந்த ரவி, கோமதி ரவி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x