Published : 03 Jan 2019 05:40 PM
Last Updated : 03 Jan 2019 05:40 PM
ஈரானில் போரை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுவதாக அந்நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனடோலு செய்தி நிறுவனம், “ பொருளாதாரத் தடை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளைப் பயன்படுத்தி ஈரானில் போரை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. எனவே ஈரான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
”மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுத உற்பத்தி அதிகரித்து இந்த பிராந்தியத்தில் ஆபத்தான நிலையை அமெரிக்கா உண்டாக்குகிறது” என்று கடந்த வாரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் அமெரிக்காவை விமர்சித்திருந்தார்.
ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் தெரிவித்தார்.
ஆனால், ட்ரம்ப்பின் மிரட்டலைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி ஈரான் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அணு ஆயுத சோதனையைப் பயன்படுத்தும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் அந்நாட்டுடன் எந்த நாடும் கச்சா என்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT