Published : 05 Dec 2018 10:58 AM
Last Updated : 05 Dec 2018 10:58 AM
தெற்கு பசிபிக்கின் நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் மிகக்குறைந்த ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய பூகம்பம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நியு காலிடோனியாவின் லாயல்டி தீவுகளுக்கு 155 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பூகம்ப மையத்திலிருந்து சுமார் 1000 கி.மீ.க்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நியு காலிடோனியா, வனுவாத்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து லாயல்டி தீவுகள் மற்றும் நியு காலிடோனியாவில் கடலோரத்தில் இருக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யுடிசி நேரம் மாலை 4.42 முதல் 5.39 மணிக்குள் முதல் சுனாமிப் பேரலை தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் 5 நிமிடத்திலிருந்து 1 மணிநேரத்துக்குள் கடற்கரையைத் தாக்கும்.
அலைகள் சுமார் 1 மீ முதல் 3 மீ உயரம் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. இது குறித்த மேல் விவரங்கள் இன்னும் வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT