Published : 18 Nov 2018 08:06 AM
Last Updated : 18 Nov 2018 08:06 AM

மாலத்தீவின் புதிய அதிபரானார் இப்ராகிம் முகமது சோலி: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

கடந்த 2013-ல் மாலத்தீவின் அதிபராக அப் துல்லா யாமீன் பொறுப்பேற்றார். பின்னர் முன் னாள் அதிபர் முகமது நஷீத் உட்பட 9 அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைத்தார். அவர் களை விடுவிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் அதிபர் யாமீனுக்கு சர்வதேச அள வில் எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் உள்நாட் டில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் குழப்பங்களுக்கு இடையில், கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது சோலி (54) வெற்றி பெற்றார். இதில் அதிபர் அப்துல்லா யாமீன் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில், புதிய அதிபர் பதவியேற்பு விழா நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலி சென்றடைந் தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவின் புதிய சபாநாயகர் காசிம் இப்ராஹிம் மோடியை வரவேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சோலி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத் மற்றும் மவுமூன் அப்துல் கயூம் ஆகியோருக்கு நடுவில் மோடி அமர்ந்திருந்தார். இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நரேந்திர மோடி, மாலத்தீவு சென்றது இதுதான் முதல்முறை. கடந்த 2015-ம் ஆண்டு மாலத்தீவு செல்ல மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது அங்கு அரசியல் குழப்பம் நிலவியதால் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

மாலத்தீவு புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி ட்விட்டரில், “மாலத்தீவில் ஜனநாய கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அந்நாட்டு மக்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலித்துள் ளது. அங்கு நிலையான, ஜனநாயக ரீதியிலான அரசு அமைய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அங்கு அமைதியும் வளமும் ஏற்பட இந்தியா உறுதுணையாக இருக்கும். அந்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ தயார் என புதிய அதிபரிடம் தெரிவிக்க உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

சீன ஆதரவாளரான அப்துல்லா யாமீன் அதிபரான பிறகு, இந்தியர்களுக்கான வேலை விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். சீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x