Published : 13 Nov 2018 05:45 PM
Last Updated : 13 Nov 2018 05:45 PM

காசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 300 ஏவுகணைகளை செலுத்தி  தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீனம் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில்,  ”இஸ்ரேல் ராணுவம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக  பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லைப் பகுதியிலுள்ள காசாவில் 300 ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்” என்று கூறபட்டுள்ளது.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து  கடந்த சில மாதங்களாகவே பேரணியாகச் சென்று வருகின்றனர்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா.  சபையின் விசாரணையை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x