Published : 22 Oct 2018 05:25 PM
Last Updated : 22 Oct 2018 05:25 PM
நேற்று மாலை கனடாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதன் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டேயிருந்தது என்று அமெரிக்க புவியியல் சர்வே துறை தெரிவிக்கிறது. இன்று காலை காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று மாலை கனடாவின் டோபினோவின் மேற்கிலிருந்து 149 மைல்கள் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் உள்ள சிறிய நகராட்சியான போர்ட் ஹார்ட்டியின் தென்மேற்கில் 135 மைல் தொலைவிலும் சீட்டல் நகரின் வடமேற்கில் 355 மைல் தொலைவிலும் 6.6 நேற்று இரவு 10.39 மணியளவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த அரை மணிநேரத்தில் கனடியன் நகரத்திலிருந்து 122 மைலிலிருந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று 6.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டது. அடுத்து ஆறு நிமிடங்கள் கடந்ததும், போர்ட் ஹார்டியின் தென்மேற்கே 138 தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு ஏற்பட்டது.
அடுத்து, 14 நிமிடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் மிதமான நிலநடுக்கம் 4.9 அளவில் பதிவு செய்யப்பட்டது.
இன்று காலை காஷ்மீரின் வடகிழக்கு மாவட்டங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ரிக்டர் அளவில் இது பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கங்கள் தொடர்பாக சேதம் அல்லது காயங்கள் பற்றிய ஆரம்ப அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை, சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில், காஷ்மீர்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வடகிழக்கு மாவட்டங்களில் இன்று நிலநடுக்கம் ஏபட்டது. இதன் பாதிப்பு 5. 6 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்திலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT