Published : 21 Oct 2018 07:11 PM
Last Updated : 21 Oct 2018 07:11 PM
தய்வானில் அதிவேக ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 17 பேர் பலியாகி 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வடகிழக்கு இலான் கண்ட்ரியில் அதிவேக புயுமா விரைவு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன, பெட்டிகள் தண்டவாளத்தில் குறுக்கு மறுக்காக தாறுமாறாகக் கிடந்ததாக தய்வான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து அந்நாட்டு நேரம் மாலை 4.50 மணிக்கு நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
தெற்கு நகரமான தைடுங்குக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது, ரயிலில் சுமார் 310 பயணிகள் பிரயாணம் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT