Published : 25 Aug 2018 02:16 PM
Last Updated : 25 Aug 2018 02:16 PM

பாலஸ்தீனத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த  நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், "பாலஸ்தீனத்தின் மேற்குகரை   மற்றும் காசா பகுதிகளில் நிர்வாகம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்த அமெரிக்கா அளிப்பதாக இருந்த நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்புக் கொண்டு கூறினார்” என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.

இந்த நிலையில், கடந்த மாதம் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

ட்ரம்பின் இந்த முடிவை பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம் - அமெரிக்கா இடையே உறவு முற்றிலுமாக சிதைந்தது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x