Published : 31 Aug 2018 05:24 PM
Last Updated : 31 Aug 2018 05:24 PM
கிரீஸின் மத்தியப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.1 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஏபி வெளியிட்ட செய்தியில், "கிரீஸின் மத்தியப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியது” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து கிரீஸின் புவி இயற்பியல் மையம் தரப்பில், ”இந்த நிலநடுக்கம் காலை 10.12 மணியளவில், 25 கிலோமீட்டர் ஆழத்தில் கிரீஸின் மத்தியப் பகுதியில் உள்ள கார்திட்சாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் திரிகலா மற்றும் லரிசா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்று சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT