Published : 16 Aug 2018 09:50 AM
Last Updated : 16 Aug 2018 09:50 AM
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை லண்டனில் மீட்கப்பட்டது.
நாளந்தாவில் உள்ள இந்திய தொல்பொருள் துறை அருங் காட்சியகத்தில் இருந்த 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலத் தால் ஆன புத்தர் சிலை, கடந்த 1961-ம் ஆண்டு காணாமல் போனது. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து லண்டன் போலீஸாரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் அந்த சிலையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிந்தது. அதேநேரம் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து புத்தர் சிலை மீட்கப்பட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைக் கப்பட்டது. மீட்கப்பட்ட புத்தர் சிலை இந்தியா கொண்டுவரப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT