Published : 26 Jun 2018 08:30 AM
Last Updated : 26 Jun 2018 08:30 AM

இரண்டு கொரிய நாடுகளுக்கு ஹாட் லைன் வசதி

கொரிய தீபகற்பத்தில் அண்மையில் அமைதி திரும்பியது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் கடந்த ஏப்ரலில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, கிம் ஜாங் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அணு ஆயுதங்களை அழிக்க அதிபர் கிம் உறுதி அளித்தார்.

இந்தப் பின்னணியில் கொரிய எல்லையில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் நேற்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே ஹாட்லைன் வசதியை தொடங்க முடிவு செய்யப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x