Published : 22 Jun 2018 05:08 PM
Last Updated : 22 Jun 2018 05:08 PM
ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 16 போலீஸார் பலியாகினர். மற்றும் பொறியாளர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காபூலில் உள்ள மூத்த அதிகாரி முகமத் நசாரி கூறும்போது, தலிபான்கள் வியாழக்கிமை நடத்திய தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர். மேலும் 13 பொறியாளர்களை கடத்தி சென்றுள்ளனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்காத நிலையில், தலிபான்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமலானை முன்னிட்டு மூன்று நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தலிபான்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரமலானுக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை தலிபான்கள் தொடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இதே பாக்திஷ் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தலிபான் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 போலீஸார் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT