Published : 27 Jun 2018 08:20 AM
Last Updated : 27 Jun 2018 08:20 AM
பாலஸ்தீன அகதிகளுக்கு உதவ இந்தியா ரூ.34.11 கோடி நிதியுதவி அளிக்கிறது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா.சபையின் சார்பில் ‘பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள்’ என்ற அமைப்பு உள்ளது.
இந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா கணிசமாகக் குறைத்துவிட்டது. இதனால் கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு உதவ நிதி திரட்டுவதற்கான கூட்டம் ஐ.நா. சபையில் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது, இந்தியா சார்பில் ரூ.34.11 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா தவிர, மேலும் 19 நாடுகள் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT