Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்த அதிபர் வேட்பாளர்

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து சில மாதங்கள் ஆனபோதும், இதுவரையில் வாக்குகள் எண்ணப்படவில்லை. இதனால் அந்நாட்டின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்குக் கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதிபர் வேட்பாளர்களாக அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரப் கனி அகமதுசாய் ஆகியோர் போட்டியிட்டனர். ஜுன் மாதம் 14ம் தேதி தேர்தல் நடந்த முடிந்தது முதல் தற்போது வரை இருவருமே தாங்கள்தான் வெற்றியாளர்கள் என்றும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தேர்தலில் முறைகேடு செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியும் வந்தனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமையில் இரு வேட்பாளர்களின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையம் ஆகியோர் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட தன்னுடைய கோரிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே வாக்கு எண்ணிக்கையில் இருந்து தான் வெளியேறுவதாகவும் அப்துல்லா அப்துல்லா தெரிவித்தார். இதனால் வாக்குகள் எண்ணப்படுவது தடைபட்டிருக்கிறது. "இனி, வாக்குகள் எண்ணும் நடைமுறையில் கலந்துகொள்ளப் போவதில்லை" என்று அவரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x