Published : 01 May 2018 09:19 AM
Last Updated : 01 May 2018 09:19 AM

சிரியா மீது மீண்டும் தாக்குதல்

சிரியா அரசு படை ரசாயன தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த 13-ம் தேதி சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தின. சுமார் 110 ஏவுகணைகள் சிரியாவின் ரசாயன ஆயுத கிடங்குகளைக் குறிவைத்து வீசப்பட்டன. இந்நிலையில் சிரியாவின் ஹமா, அலெப்பா நகரில் உள்ள விமானப் படைத் தளங்களைக் குறிவைத்து நேற்று குண்டுகள் வீசப்பட்டன. இதில் சிரியாவின் நட்பு நாடான ஈரானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடையாளம் தெரியாத எதிரிகள் வான்வழி தாக்குதலை நடத்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x