Published : 27 Apr 2018 08:54 AM
Last Updated : 27 Apr 2018 08:54 AM
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் இடிந்து விழுந்துவிட்டது என்று சீன புவியியலாளர்கள் தெரிவித்துள் ளனர்.
வடகொரியாவின் மேன்டப் மலைப் பகுதியில் அணு ஆயுத சோதனை மையம் உள்ளது. அங்கு பிரம்மாண்ட சுரங்கங்கள் தோண்டப்பட்டன. கடைசியாக கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அணுகுண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. அதன்பின் கடந்த அக்டோபரில் சுரங்கம் உடைந்து 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இதனை வடகொரியா மறுத்தது.
இந்தப் பின்னணியில் சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக புவியியலாளர்கள், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “செப்டம்பர் 3-ம் தேதி வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனையால் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக அணு ஆயுத சோதனை மையம் இடிந்துள்ளது. அங்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேன்டப் மலையை ஒட்டியுள்ள சீன எல்லைப் பகுதிகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. எனினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
வடகொரியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா இனிமேல் அணுஆயுத சோதனை நடத்தாது, அணு ஆயுத சோதனை மையம் மூடப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT