Published : 15 Feb 2018 05:29 PM
Last Updated : 15 Feb 2018 05:29 PM

துப்பாக்கிகள் மீது பித்துப் பிடித்து அலைந்தவர்: புளோரிடா துப்பாக்கிச் சூடு கைது நபர் குறித்து போலீஸார்

புளோரிடாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கிகள் மீது பைத்தியமானவர் என்று அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை கைது போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் குறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, நாங்கள் அவரது சமூக வலைதளங்களை நன்கு ஆராய்ந்து வருகிறோம். அவரை ஏதோ ஒரு சம்பவம் மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு நண்பர்கள் கிடையாது. அவர் துப்பாக்கிகள் மீது பைத்தியமாக இருந்துள்ளார் என்றார்.

அவருடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் கூறும்போது, ”எங்களுக்கு அவரை மிகவும் கூச்சம் சுபம் கொண்ட நபராகதான் தெரிந்திருக்கிறார். அவர் துப்பாக்கி, கத்திகள் குறித்து நிறைய பேசினார் ஆனால் யாரும் அதை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை” கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x