Published : 04 Feb 2018 09:34 AM
Last Updated : 04 Feb 2018 09:34 AM
அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் டாம் ஷன்னான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
21-ம் நூற்றாண்டில் அணு தீவிரவாதம் மிக முக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் அரசு சாரா அமைப்புகளின் கைகளுக்கு செல்வது உலக அமைதிக்கு நல்லதல்ல. இதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். எனினும், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT