Last Updated : 20 Feb, 2018 03:08 PM

 

Published : 20 Feb 2018 03:08 PM
Last Updated : 20 Feb 2018 03:08 PM

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துக: வெள்ளை மாளிகை முன் மாணவர்கள் போராட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்  மாணவர்கள், பெற்றோர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையில் மாணவர்கள் அடுத்து நாங்களா? என்ற எழுதிய பதாகைகளுடன் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து எல்லா ஃபெச்லர் என்ற மாணவர் கூறும்போது, "நாங்கள் இந்தத் தருணத்தில் கோபப்படுவது சரி என்று நினைக்கிறோம். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த இது உதவும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு நாளும் நான் எனது பெற்றோரிடம் விடை பெறும்போது நான் மீண்டும் எனது பெற்றோரை பார்ப்பேனா என்ற  சந்தேகம் தோன்றுகிறது" என்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி குறித்த ஆராயும் முறையை இன்னும் மேம்படுத்தும் முயற்சியில் அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x