Published : 22 Feb 2018 03:32 PM
Last Updated : 22 Feb 2018 03:32 PM

பெருவில் பேருந்து விபத்து: 44 பேர் பலி

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் 44 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்.

 

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "பெருவின் அரிகுவிபா மாகாணத்தில் புதன்கிழமை பயணிகள் பேருந்து பான் - அமெரிக்க தேசிய சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தவறி ஒகானா ஆற்றில் விழுந்தது. இதில் பயணம் செய்த 44 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்” என்றார்.

பேருந்து விபத்துக்குள்ளனான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு பெரு அதிபர் பெட்ரோ பெலோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x