Published : 22 Jan 2018 03:47 PM
Last Updated : 22 Jan 2018 03:47 PM
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் பலியாகினர்.
இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, "சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து தீவிரவாதிகளை குறிவைத்து துருக்கி ராணுவத்தினர் ஹஃப்ரின் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் பொது மக்கள் 18 பேர் பலியாகினர். இதில் 6 பேர் குழந்தைகள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்து படையினர் துருக்கியில் அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்து படையினருக்கு எதிராக துருக்கி தொடர்ந்து சிரியாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT