Last Updated : 14 Dec, 2017 04:16 PM

 

Published : 14 Dec 2017 04:16 PM
Last Updated : 14 Dec 2017 04:16 PM

சோமாலியாவில் போலீஸ் பயிற்சி நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 17 பேர் பலி

சோமாலியாவில் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 17 போலீஸார் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சோமாலியா போலீஸ் அதிகாரிகள் தரப்பில்,  ”சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில், உள்ள போலீஸ் பயிற்சி நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) வழக்கம் போல் காலை உடற்பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில்  17 போலீஸார் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x