Last Updated : 06 Nov, 2017 12:23 PM

 

Published : 06 Nov 2017 12:23 PM
Last Updated : 06 Nov 2017 12:23 PM

டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்க போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வில்சன் கவுன்டியில் சதர்லேண்ட் ஸ்ப்ரிங்க்ஸ் எனுமிடத்தில் உள்ளது ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச்.

 இந்த தேவாலயத்தில் இளைஞர் ஒருவர் ஞயிற்றுக்கிழமையன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இறந்த நிலையில் அவரது காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அடையாளம் கண்டுபிடிப்பு

டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 26 வயதான டேவின் பாட்ரிக் கெல்லி என்று அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கெல்லி போலீஸ்காரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா இல்லை தன்னைத்தானே அவர் சுட்டுக் கொண்டாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

தொடர்ந்து போலீஸார் அமெரிக்கா விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x