Published : 24 Nov 2017 05:35 PM
Last Updated : 24 Nov 2017 05:35 PM
பாகிஸ்தான் நீதிமன்ற உத்தரவையடுத்து, தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுகாவலில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து, இனிப்பு வழங்கி அவரது விடுதலையை கொண்டாடினர்.
மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் ஹபீஸ் சயீத் இருந்து வருகிறார். அவரது வீட்டுக்காவல் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவடைகிறது. அவரை விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஹபீஸ் சயீத் லாகூரில் வீட்டுக்காவலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வீட்டின் முன் திரண்டு இருந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு, ஆதரவாளர்கள் இனிப்பு ஊட்டினர் மேலும் அங்கிருந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி விடுதலையை கொண்டாடினர்.
தீவிரவாதி ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT