Published : 05 Feb 2024 04:00 AM
Last Updated : 05 Feb 2024 04:00 AM

இன்று என்ன? - ராணுவ தளபதியாக இருந்து பிரதமரான பர்வேஸ் முஷாரஃப்

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃப். இவர் 1943-ம்ஆண்டு டெல்லியில் பிறந்தார். 1947-ல் நடந்த இந்திய பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறினார்.

இவர் பிரதமர் நவாஸ் ஷெரிப் அரசுக்கு எதிராக அவசர நிலை பிரகடனம் செய்து, ஆட்சியைக் கலைத்து பாகிஸ்தான் ராணுவம் மூலம் நாட்டின் அதிபரானார். இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடக்க காரணமாக இருந்தார். 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அன்றைய இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு பேசினார் பர்வேஸ்.

பின்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு மருந்துகள் அனுப்பி வைத்தார். 2007 ஜூலையில் இவரது ஆணைப்படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியில் பதுங்கியிருந்த அல்-கொய்தா தீவிரவாதிகளை பாகிஸ்தானிய ராணுவம் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது. 2008 ஆகஸ்ட் 18-ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 2023 பிப்ரவரி 5-ம் தேதி தன்னுடைய 79- வது வயதில் துபாயில் உடல்நலக் குறைவால் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x