Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா காரணமாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும் கூடுதலாக 15 சதவீதம் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 வகுப்புகளை ஜுன் 3-வதுவாரத்தில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கைஅனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும்நிலையில் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல்15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்.
மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப் பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து கொள்குறிவகை தேர்வு நடத்தி (மொத்தம் 50 வினாக்கள்) அந்த மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜுன்3-வது வாரத்தில் இருந்து அப்போது, கரோனா குறித்த அரசின்வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை தொடங்கலாம்.
2021-2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த தொடங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT