Published : 20 Oct 2020 11:17 AM
Last Updated : 20 Oct 2020 11:17 AM
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும். www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT