Published : 28 Jul 2020 07:00 AM
Last Updated : 28 Jul 2020 07:00 AM
சத்துணவு சாப்பிடும் 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் சத்துணவுஇதைத் தொடர்ந்து, 1 முதல் 5-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு என மே மாதத்துக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுபொருட்கள் விநியோகம் செய் யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 11 லட்சத்து 79,669 மாணவ, மாணவிகளுக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 8 லட்சத்து 82,457 மாணவ, மாணவிகளுக்கும் அரிசி, பருப்பு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஒரு வாரத்துக்குள் இப்பணி நிறைவடையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT