Published : 05 Dec 2019 10:43 AM
Last Updated : 05 Dec 2019 10:43 AM
தெற்காசிய விளையாட்டு போட்டியில் வட்டு எறிதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான வட்டு எறியும் போட்டியில், இந்திய வீரரான கிரிபால் சிங் 57.99 மீட்டர் தூரம் வட்டை எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரரான ககன்தீப் சிங், இதில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பெண்கள் பிரிவில் நடந்த வட்டு எறியும் போட்டியிலும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் தங்கப் பதக்கதை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான சுரவி பிஸ்வாஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT