Published : 21 Nov 2019 08:34 AM
Last Updated : 21 Nov 2019 08:34 AM
துபாய்
தாராளமயமாக்கப்பட்ட மருத்துவ விசா கொள்கையை இந்தியா சமீபத்தில் அமல்படுத்தியது.
இந்நிலையில், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சைபெற வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு, உட்புற சிகிச்சைக்காக 180 நாட்கள் தங்கிச் செல்ல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. முதன்மை விசாவை மருத்துவவிசாவாக மாற்றவேண்டும் என்ற விதி விலக்கி கொள்ளப்படுகிறது. வெளி நோயாளி அல்லது சிகிச்சை மட்டுமே தேவைப்படும் வெளிநாட்டவர், தனது முதன்மை விசாவிலேயே சிகிச்சை பெறலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அதிகாரிகள் தங்களிடம் சிகிச்சைபெறுபவரின் விவரங்களை 24 மணி நேரத்திற்குள் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு வழங்க வேண்டும். உறுப்பு மாற்று, அறுவைசிகிச்சை செய்ய மருத்துவ விசா மட்டுமே அனுமதிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT