Published : 12 Nov 2019 08:19 AM
Last Updated : 12 Nov 2019 08:19 AM
தோஹா:
ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப்சவுத்ரி வெள்ளிப் பதக்கம்வென்றார்.
14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகத்தார் நாட்டின் தலைநகரானதோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 17 வயதான இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் 244.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வட கொரியாவின் கிம் சாங் குக் 246.5 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஈரானின் ஃபோரோவி ஜாவேத் 221.8 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா இறுதி சுற்றில் 181.5 புள்ளிகள் சேர்த்து 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT