Published : 31 Oct 2022 06:00 AM
Last Updated : 31 Oct 2022 06:00 AM

அக்.31: இன்று என்ன? - வங்கிகளை தேசியமயமாக்கிய பிரதமர்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர், சிறந்த அரசியல் செயல்பாட்டாளர் இந்திரா பிரியதர்ஷினி. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகள். ஆக்ஸ்போர்டில் பட்டப்படிப்பை முடித்தார். இந்தியா திரும்பியதும் அரசியலில் கால் பதித்தார். சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். 1960-ல்பசுமை புரட்சி ஏற்பட காரணமானவர். வங்கிகளால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய நன்மை கிடைக்கவில்லை என்பதால் 1969-ல் ரூ.50 கோடிக்கு மேல் வைப்புத்தொகையாக வைத்திருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். வறுமையை விரட்டும் நோக்கில் 1971-ல் கரீபி ஹட்டாவோ திட்டத்தை செயல்படுத்தினார். இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x