Published : 13 Sep 2022 06:04 AM
Last Updated : 13 Sep 2022 06:04 AM
சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதிய மாணவர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT