Published : 01 Jul 2022 07:30 AM
Last Updated : 01 Jul 2022 07:30 AM

ஆப்கனில் மத அறிஞர் மாநாட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடக்கும் மத அறிஞர்கள் மாநாட்டில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதிஇல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தலைநகர்காபூலில் மத அறிஞர்கள் மாநாடுநேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. மத அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாநாட்டை தலிபான்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் இஸ்லாமிய ஆட்சி, தேசிய ஒற்றுமை, சமூக, பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து இதில் கருத்தரங்குள், ஆய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன.

மாநாட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும் பெண்களின் பிரதிநிதிகளாக ஆண்களே கலந்து கொள்வார்கள் என்றும் தலிபான் அரசின் துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பெண்கள் நமது தாய்கள்,சகோதரிகள், அவர்களை நாம்உயர்வாக மதிக்கிறோம். அவர்களது மகன்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டாலே அவர்கள் கலந்து கொண்டதாகத்தான் அர்த்தம். பெண்களின் பிரதிநிதிகளாக ஆண்கள் கலந்து கொண்டு பெண்கள் சார்பாக பேசுவார்கள்.’’ என்று தெரிவித்தார்.

இம்முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தலிபான்கள்ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன. சமூக விவகாரங்கள் பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், பெண்கள் பள்ளிகளை மீண்டும் திறப்பது, பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை பற்றி 3 நாள் மாநாட்டில் விவாதிக்கப்படுமா என்பது தெரியவில்லை என்றுதகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x